Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வயநாடு மக்களுக்கு கிடைத்த வெற்றி: மல்லிகார்ஜுன கார்கே

Webdunia
வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (16:51 IST)
உச்ச நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பு வயநாடு மக்களுக்கு கிடைத்த வெற்றி என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
 
 காங்கிரஸ் எம்பி ஆக இருந்த ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை குஜராத் உயர்நீதிமன்றம் விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்த நிலையில் மன்றத்தின் தீர்ப்பை  நிறுத்தி வைத்த சுப்ரீம் கோர்ட் அதிரடியாக பல கேள்விகளையும் எழுப்பியது.
 
இந்த நிலையில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ராகுல் காந்தி மீண்டும் எம்பி ஆகி உள்ளார் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மல்லிகார்ஜுன கார்கே கூறியபோது, ‘ சாமானிய மக்களின் குரல் ஜனநாயகத்தின் கோவிலில் மீண்டும் ஒலிக்கும் என்றும் உண்மை மற்றும் தைரியத்தின் சின்னமாக ராகுல் காந்தி மாறி உள்ளார் என்று தெரிவித்தார். 
 
மேலும் இந்த தீர்ப்பு வயநாடு மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் ராகுல் காந்திக்கு எதிரான பாஜகவின் அரசியல் சதித்திட்டம் வெளிப்பட்டு விட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments