Publish Date: Thu, 27 Oct 2022 (21:19 IST)
Updated Date: Thu, 27 Oct 2022 (21:21 IST)
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ஏற்ற மல்லிகார்ஜுன கார்கே கேட்ட முதல் கேள்வி பிரதமர் மோடி பதில் சொல்வாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் பதவி ஏற்ற மல்லிகார்ஜூனே கார்கே தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் இந்தியாவின் அந்நிய செலவாணி கையிருப்பு 85 பில்லியன் டாலர் சரிந்து விட்டது என்றும் இந்த ரூபாயின் மதிப்பு மிகப்பெரிய அளவில் சரிந்து விட்டது என்றும் இதுகுறித்து நீதி அமைச்சரோ அல்லது பிரதமரோ யாராவது பதில் கூறுவார்களா என்று கேள்வி எழுப்பி உள்ளார்
காங்கிரஸ் தலைவராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக எழுப்பிய கேள்விக்கு பிரதமர் நரேந்திர மோடி அல்லது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் சொல்வார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்