Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடற்கரையில் பிணமாக கிடந்த இளம் நடிகர்: திரையுலகினர் அதிர்ச்சி!

Webdunia
செவ்வாய், 16 ஜனவரி 2018 (13:41 IST)
மலையாள இளம் நடிகர் சித்து பிள்ளையின் உடல் கோவா கடற்கரையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மலையாள திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
 
மலையாள ஆக்‌ஷன் கிரைம் திரைப்படமான செகண்ட் ஷோ திரைப்படத்தில் பிரபல நடிகர் துல்கர் சல்மானுடன் தனது முதல் படத்தில் நடித்தார் இளம் நடிகர் சித்து பிள்ளை. அதன் மூலம் பிரபலமான அவர் பின்னர் சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார்.
 
திருச்சூரில் வசித்து வந்த 27 வயதான நடிகர் சித்து பிள்ளை கடந்த 12-ஆம் தேதி கோவாவுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் கடந்த திங்கள் கிழமை கோவா கடற்கரையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரது உடலை அவரது தாய் திங்கள் கிழமை மாலை அடையாளம் காட்டியுள்ளார்.
 
நடிகர் சித்து பிள்ளை பிரபல மலையாள தயாரிப்பாளர் பிகேஆர் பிள்ளையின் மகன் ஆவார். சித்து பிள்ளையின் மரணத்துக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அவரது இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரான திருச்சூரில் நடைபெற உள்ளது.

 
இளம் நடிகர் சித்து பிள்ளையின் மரணத்துக்கு பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் இரங்கலையும் தனது வருத்தத்தையும் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments