Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபரிமலையில் பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தெரிந்தது ... பக்தர்கள் பக்தி பரவசம்

Webdunia
சனி, 14 ஜனவரி 2023 (19:17 IST)
கேரள மாநிலம் சபரிமலையில் இன்று மகர ஜோதியைக் காண 2 லட்சம் பக்தர்கள் குவிந்துள்ளனர்.

கேரள மா நிலத்த்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி முன்னணி ஆட்சி நடந்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் ஐயப்பன் சாமிக்கு மாலை போட்டுக் கொண்டு சபரிமலைக்கு பாதையாத்திரை செல்வது வழக்கம்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரொனா கட்டுப்பாடுகள் காரணமாக கூட்டம் குறைவாக இருந்த நிலையில், இந்த ஆண்டு மகரஜோதியைக் அதிகளவில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.,

மகரவிளக்கு பூஜையை ஒட்டி கடந்த மாதம் 30 ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில், இன்று நடக்கும் மகர ஜோதியைக் காண ஆன்லைனில் 90 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மகரஜோதியை முன்னிட்டு  ஐயப்பனுக்கு பந்தள மகாராஜா வழங்கிய திருவாபரண பெட்டி கோயிலுக்கு வந்தடைந்த பின், சாமியே சரணம் ஐயப்பா என பக்தர்களின் கோஷம் முழங்க  பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தெரிந்தது.
 

தொடர்புடைய செய்திகள்

வங்கக்கடலில் ரீமால் புயல்.. 21 மணி நேரத்திற்கு விமான சேவை நிறுத்திவைப்பு

வங்கக் கடலில் 'ரீமால்' புயல் எதிரொலி: தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!

8 நாட்களுக்கு பின் குற்றாலத்தில் குளிக்க அனுமதி.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

வங்கக்கடலில் உருவானது ரீமால் புயல்..! நாளை தீவிர புயலாக வலுவடையும்..!!

ஜெயக்குமார் மரண வழக்கு.! சிபிசிஐடி விசாரணை தீவிரம்.! குடும்பத்தாரிடம் 6 மணி நேரம் விசாரணை..!!

அடுத்த கட்டுரையில்
Show comments