Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிறைவு பெற்றது மகரவிளக்கு பூஜை.. சபரிமலையில் நடை சாத்தப்படுவது எப்போது?

Mahendran
சனி, 18 ஜனவரி 2025 (10:43 IST)
சபரிமலையில் மகரவிளக்கு பூஜை இன்றுடன் நிறைவடைந்ததை அடுத்து, வரும் 20ஆம் தேதி கோயில் நடை மூடப்படும் என்று சபரிமலை கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு மண்டல பூஜை சீசன் கடந்த நவம்பர் மாதம் 16ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 26ஆம் தேதி நிறைவடைந்தது. அதன் பின்னர் மகர விளக்கு பூஜை டிசம்பர் 31ஆம் தேதி தொடங்கி, இன்றுடன் முடிவுக்கு வருகிறது.

இதனை தொடர்ந்து, ஜனவரி 20ஆம் தேதி காலை பந்தளம் அரண்மனை பிரதிநிதி சாமி தரிசனம் செய்த பின் கோயில் நடை மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருப்பதால், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமின்றி உடனடி முன்பதிவு செய்தும் கோவிலுக்கு வரலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இன்றும் நாளையும் மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் நாளை இரவு வழக்கமான பூஜை முடிந்தவுடன் நடை மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பற்றி எரிகிறது பாகிஸ்தான்: பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தின் தாக்குதலால் பரபரப்பு..!

தூத்துகுடியில் கள் இறக்கும் போராட்டம்.. பனைமரம் ஏறி கள் இறக்கினார் சீமான்..!

கமலை குறை சொல்லாதவர்க விஜய்யை விமர்சிக்க தகுதி இல்லாதவர்கள்: ஆளுனர் பேட்டி

தியாக தீபங்களான தந்தையரை வணங்குவோம்! - அன்புமணி பதிவிற்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்!

ஒரு பாகிஸ்தானின் கழுதை விலை ரூ.3 லட்சம்.. சீனா வாங்குவது இதற்காக தானா?

அடுத்த கட்டுரையில்
Show comments