ஒரே நாளில் 16,620 பேர்களுக்கு கொரோனா: அதிர்ச்சியில் மகாராஷ்டிரா அரசு!

Webdunia
திங்கள், 15 மார்ச் 2021 (07:15 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் 16 ஆயிரத்து 620 பேர்க கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் 
 
மேலும் குறிப்பாக நாக்பூர் மற்றும் லத்தூர் ஆகிய மாவட்டங்களில் மிக அதிகமான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது அதேபோல் நாசிக், புனே, நவி மும்பை, தானே ஆகிய பகுதிகளிலும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவியதை அடுத்து இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பலியாகி உள்ளனர் என்பதும் தற்போது 1,26,237 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments