Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரே நாளில் 25 ஆயிரத்தை தாண்டிய தினசரி பாதிப்பு! – இந்தியாவில் கொரோனா!

ஒரே நாளில் 25 ஆயிரத்தை தாண்டிய தினசரி பாதிப்பு! – இந்தியாவில் கொரோனா!
, ஞாயிறு, 14 மார்ச் 2021 (10:40 IST)
உலக நாடுகள் முழுவதும் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 20 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 25,317 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 1,13,59,045 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 158 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  1,58,604 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,09,89,897 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 2,10,544 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக வெளியிட்டது போலி அறிக்கை.. விரைவில் உண்மை அறிக்கை! – எஸ்.பி.வேலுமணி!