Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதிப்பில் ரஷ்யாவையும், மரணத்தில் ஸ்பெயினையும் முந்திய மகாராஷ்டிரா: அதிர்ச்சி தகவல்!

Webdunia
செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (07:09 IST)
பாதிப்பில் ரஷ்யாவையும், மரணத்தில் ஸ்பெயினையும் முந்திய மகாராஷ்டிரா
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகி வருகிறது. நேற்று ஒரே நாளில் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
குறிப்பாக இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆரம்பத்திலிருந்தே கொரோனா வைரஸின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ரஷ்யாவில் பாதித்தவர்களை விட அதிகமாகி உள்ளது என்பது அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது. அதாவது ரஷ்யாவில் மொத்த கொரோனா பாதிப்பு 10,68,320 என்ற நிலையில் அதைவிட அதிகமாக மகாராஷ்டிராவில் மட்டும் 10,77,374 பேர் கொரோனாவால் பாதிக்கபப்ட்டுள்ளனர்.
 
அதேபோல் மகாராஷ்டிராவில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஸ்பெயின் நாட்டில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஸ்பெயினில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 29,848 என்ற நிலையில் மகாராஷ்டிராவில் மட்டும் 29,894 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
உலக நாடுகளை விட இந்தியாவில் உள்ள ஒரே ஒரு மாநிலத்தில் கொரோனா அதிகமாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments