Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1 கோடி பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி: மகாராஷ்டிரா சாதனை!

Webdunia
செவ்வாய், 27 ஜூலை 2021 (14:30 IST)
இந்தியாவில் 1 கோடி பேருக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளும் செலுத்திய முதல் மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் உருவெடுத்துள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
இந்நிலையில் கொரோனா 2 ஆம் அலை இந்தியாவில் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 44,19,12,395 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 1 கோடி பேருக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
 
இதன் மூலம் இந்தியாவில் 1 கோடி பேருக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளும் செலுத்திய முதல் மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் உருவெடுத்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் உல்லாச குளியல் ஆடும் சிறுவர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments