Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரங்குகளுடன் செல்ஃபி எடுக்க ஆசை! விபரீத ஆசையால் உயிரிழந்த ஆசிரியர்!

Webdunia
வியாழன், 5 ஜனவரி 2023 (13:20 IST)
மகாராஷ்டிராவில் குரங்குகளுடன் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டு மலையிலிருந்து விழுந்து ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நஸ்ராப்பூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல்லா ஷேக். இவர் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அப்பகுதியில் வராந்தா காட் என்னும் அழகான மலைக்குன்று தொடர் உள்ளது.

விடுமுறை சமயத்தில் அங்கு சென்ற அப்துல்லா ஷேக் காடுகள், மலை, அருவிகளை ரசித்துள்ளார். அப்போது அங்கு மலைக்குன்றின் மேல் சில குரங்குகள் அமர்ந்திருந்துள்ளன. அவற்றோடு செல்ஃபி எடுக்க விரும்பிய அப்துல்லா ஷேக் அதற்காக அவை அருகில் செல்ல முயன்றுள்ளார்.

அப்போது கால் வழுக்கி குன்றின் சரிவில் அவர் விழுந்துள்ளார். சுமார் 500 அடி பள்ளமான பகுதியில் அவர் விழுத்ததில் படுகாயமடைந்து உயிரிழந்தார். இதுகுறித்து சுற்றுலா பயணிகள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடம் விரைந்த போலீஸார் அப்துல்லா ஷேக்கின் உடலை மீட்டுள்ளனர். குரங்குகளுடன் படம் பிடிக்க ஆசைப்பட்டு பள்ளி ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

டெல்லிக்கு வந்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

தமிழ்நாட்டுல இருக்கேன்! முடிஞ்சா இங்க வாங்க! சிவசேனா தொண்டர்களுக்கு சவால் விட்ட குணால் கம்ரா!

பஸ்சை கடத்திய கல்லூரி மாணவர்கள்: புதுக்கோட்டையில் பரபரப்பு

சவுக்கு சங்கர் இல்லத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது; அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments