Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாட்டிறைச்சியா? ஆட்டிறைச்சியா? கண்டுபிடிக்க கருவி அறிமுகம்

மாட்டிறைச்சியா? ஆட்டிறைச்சியா? கண்டுபிடிக்க கருவி அறிமுகம்
, வெள்ளி, 7 ஜூலை 2017 (16:36 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் மாட்டிறைச்சியை கண்டுபிடிக்கும் கருவி காவல்துறையினருக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது.


 

 
மகாராஷ்டிராவில் ஏற்கனவே மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மத்திய அரசும் மாட்டிறைச்சிக்கு தடை விதித்தது. இந்நிலையில் மாட்டிறைச்சியை கண்டுபிடிக்கும் கருவி மாநில காவல்துறையினருக்கு வழங்கப்பட உள்ளது. 
 
இந்த கருவி மூலம் வைத்திருப்பது ஆட்டிறைச்சியா? அல்லது மாட்டிறைச்சியா என்பதை 30 நிமிடத்தில் கண்டுபிடித்து விடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சிலர் செய்யும் அட்டூழியம் தாங்க முடியவில்லை. இந்நிலையில் மாநில அரசின் இந்த செயல் மேலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
 
இதை செயல்படுத்த மகாராஷ்டிரா மாநில அரசு முனைப்புடன் உள்ளது. மேலும் விரைவில் காவல்துறையினருக்கு, மாட்டிறைச்சியை கண்டிபிடிக்கும் கருவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாலையில் சென்ற பசு மீது மோதிய அமித்ஷாவின் கார்