Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாங்கிய ஆறே நாட்களில் ரிப்பேர்: ஓலா பைக்கை கழுதையில் கட்டி ஊர்வலம் சென்ற நபர்

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (16:41 IST)
வாங்கிய ஆறே நாட்களில் ரிப்பேர்: ஓலா பைக்கை கழுதையில் கட்டி ஊர்வலம் சென்ற நபர்
ஓலா பைக் வாங்கி 6 நாட்கள் மட்டுமே ஆனதை அடுத்து அந்த பைக்கை கழுதையில் கட்டி ஊர்வலம் எடுத்துச் சென்ற நபரால் மகாராஷ்டிர மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் ஓலா பைக்கை வாங்கினார். அவர் வாங்கி 6 நாட்களில் அந்த பைக் ரிப்பேர் ஆகிவிட்டது இதனையடுத்து அவர் சர்வீஸ் சென்டருக்கு புகார் அளித்தார். ஆனால் அந்த நிறுவனத்திடமிருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை 
 
இதனால் ஆத்திரமடைந்த அவர் தான் வாங்கிய பைக்கில் கழுதையில் கட்டி சாலையில் ஊர்வலமாக எடுத்துச் சென்றார். இதுகுறித்து புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலானதை அடுத்து ஓலா நிறுவனம் உடனடியாக சர்வீஸ் எஞ்சினியரை அனுப்பி வைத்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments