Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லையில் பதற்றம் -சீன நிறுவனங்களுடனான 5000 கோடி ரூபாய் ஒப்பந்தங்களை நிறுத்திய மாநிலம்!

Webdunia
செவ்வாய், 23 ஜூன் 2020 (07:34 IST)
இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவும் எல்லைப் பதற்றத்தை அடுத்து 5000 கோடி ரூபாய் அளவிலான ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளது மகாராஷ்டிரா அரசு.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக லடாக் பகுதியில் இந்தியா மற்றும் சீனா எல்லை தொடர்பாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சம்மந்தமாக நடந்த தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் பலியாகியுள்ளனர். சீன தரப்பில் இருந்து பலியான வீரர்களின் விவரம் வெளியாகவில்லை. இதனால் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலும் உறவு சுமூகமாக இல்லை.

இதையடுத்து இந்தியாவில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் எனக் குரல்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் சீன நிறுவனங்களுடன் ரூ.5,000 கோடி மதிப்பிலான மூன்று ஒப்பந்தங்களை நிறுத்திவைத்துள்ளது மகாராஷ்டிரா அரசு. இதுகுறித்து பேசியுள்ள அம்மாநில தொழில்துறை அமைச்சர்,’இந்த முடிவு மத்திய அரசுடன் கலந்தாலோசித்துதான் எடுக்கப்பட்டுள்ளது. சீனா தவிர மற்ற நாடுகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை செயல்படுத்த மாநில அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது’ எனக் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments