Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசுப்பணி தேர்வுகள் இனி மராத்தி மொழியிலும் நடத்தப்படும்: முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ்

Mahendran
வியாழன், 13 மார்ச் 2025 (13:28 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் இனி அரசு பணிக்கான தேர்வுகள் மராத்தி மொழியிலும் நடத்தப்படும் என முதல்வர் தேவேந்திர பட்டினின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
 
மும்பையில் வாழ்வதற்கு மராத்தி தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என ஆர். எஸ். எஸ். தலைவர் ஒருவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
 
இந்த நிலையில், முதல்வர் தேவேந்திர பட்டினர் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, "மகாராஷ்டிரா மற்றும் மும்பையின் மொழி மராத்திதான். இங்குள்ள அனைவரும் மராத்தி மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்," என்று தெரிவித்தார்.
 
மேலும், மகாராஷ்டிராவில் அரசு பணியாளர்கள் தேர்வாணைய தேர்வுகள் இனி மராத்தி மொழியிலும் நடத்தப்படும் என்றும், அதேசமயம், ஆங்கிலத்திலும் நடைபெறும் என்றும் அவர் கூறினார். இருப்பினும், சில வேளாண் பொறியியல் தொடர்பான தேர்வுகள் மட்டும் ஆங்கிலத்தில் நடத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 
அத்துடன், பொறியியல் படிப்புகளை மராத்தி மொழியிலும் நடத்த மாநில அரசு முடிவு செய்துள்ளதாகவும், இனிமேல் பொறியியல் தேர்வுகளும் மராத்தி மொழியில் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
 
Edited by Mahendran 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அட்சயதிருதியை நாள்.. விலை உயர்ந்தபோதிலும் தங்கம் விற்பனை அமோகம்..!

நடுவர்மன்ற உத்தரவுகளை நீதிமன்றங்கள் மாற்றியமைக்கலாம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி..!

4 நாட்களில் வறண்டு போன பாகிஸ்தான் நதி.. செயற்கைகோள் அதிர்ச்சி புகைப்படம்..!

மதுரை ரயில் நிலையத்தில் பூக்கடைக்கு அனுமதி.. ஜோராக விற்பனையாகுமா மல்லிகைப்பூ?

சீமான் தலை துண்டிக்கப்படும்.. இமெயில் மிரட்டல் விடுத்த மர்ம நபரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments