Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல்: கருத்துக்கணிப்பு பாஜகவுக்கு சாதகம்..!

Siva
வியாழன், 21 நவம்பர் 2024 (07:10 IST)
மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய இரண்டு மாநிலங்களில் நேற்று சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் நேற்று தேர்தல் முடிவடைந்த உடன் ஊடகங்கள் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை எடுத்தன.

அதில் இரண்டு மாநிலங்களிலும் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணி 150 முதல் 170 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்றும் இந்தியா கூட்டணி 110 முதல் 130 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 288 தொகுதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 அதேபோல் ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக கூட்டணி 44 முதல் 53 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 25 முதல் 37 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது. இந்த மாநிலத்தில் மொத்தம் 81 தொகுதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் கருத்துக்கணிப்பின்படி முடிவுகள் வந்தால் இரண்டு மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments