Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளின் திருமணத்திற்கு சேர்த்த பணம்; ஆக்ஸிஜனுக்காக அளித்த விவசாயி!

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (13:50 IST)
மத்திய பிரதேசத்தில் தனது மகள் திருமணத்திற்காக சேமித்து வைத்த பணத்தை விவசாயி ஒருவர் ஆக்ஸிஜன் இன்றி சிரமப்படுபவர்களுக்காக கொடுத்துள்ளார்.

மத்திய பிரதேசம் மாநிலம் நீமுச் மாவட்டத்தை சேர்ந்தவர் சம்பலால் குர்ஜார். விவசாயியான இவர் தனது மகளின் திருமணத்திற்காக 2 லட்சம் ரூபாய் சேர்த்து வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் ஆக்ஸிஜனுக்காக சிரமப்படுவதை கண்ட அவர் மகளின் திருமணத்தை ஆடம்பரமின்றி நடத்தியதுடன், தான் சேர்த்து வைத்திருந்த 2 லட்சம் ரூபாயை ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பெற நன்கொடையாக அளித்துள்ளார்.

சம்பலால் குர்ஜார் இந்த 2 லட்ச ரூபாய்க்கான காசோலையை மாவட்ட கலெக்டர் மயங் அகர்வாலிடம் அளித்துள்ளார். இதன் மூலம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு 2 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்க முடியும் எனக் கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் சாக போகிறேன், இல்லையேல் அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள்.. வரதடசணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை..!

நடிகை ராதிகாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. சென்னை மருத்துவமனையில் அனுமதி..!

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார் ஓபிஎஸ்..!

கிராமங்களில் உள்ள கடைகளுக்கு தொழில் உரிமம் தேவையில்லை! - முடிவை மாற்றிய தமிழ்நாடு அரசு!

இந்தியாவும் ரஷ்யாவும் சேர்ந்து அவங்களே நாசமாக போறாங்க?! - ஓப்பனாக தாக்கிய ட்ரம்ப்!

அடுத்த கட்டுரையில்
Show comments