Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவருக்கு விவசாயத்தை பத்தி ஒரு வெங்காயமும் தெரியாது! – ராகுல் காந்தி குறித்து முதல்வர்!

Webdunia
வெள்ளி, 9 அக்டோபர் 2020 (14:26 IST)
ராகுல் காந்தி பிரதமர் மோடியின் வீடியோ குறித்து கருத்து தெரிவித்திருந்த நிலையில், ராகுல்காந்தி குறித்து மத்திய பிரதேச முதல்வர் பேசியுள்ளது வைரலாகியுள்ளது.

மத்திய அரசின் வேளாண் மசோதாவை எதிர்த்து வரும் ராகுல் காந்தி கிராமம் கிராமமாக சென்று இதுகுறித்து பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் டென்மார்க் அதிகாரி ஒருவரோடு பிரதமர் மோடி பேசிய வீடியோவை தனது ட்விட்டரில் பதிவிட்ட ராகுல் காந்தி ” இந்தியாவிற்கு மிகப்பெரும் ஆபத்தே பிரதமருக்கு எதுவும் புரிவதில்லை என்பதல்ல. சுற்றியிருப்பவர்களும் அவருக்கு அதை சொல்ல தைரியம் இல்லாமல் இருப்பதுதான்” என கூறியுள்ளார்.

பிரதமருக்கு காற்றாலை தொழில்நுட்பம் குறித்து தெரியாது என்பது போல ராகுல் காந்தி பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் அவர் பேசியது உண்மை என்பதற்கான ஆதாரங்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ராகுல்காந்தி குறித்து பேசியுள்ள மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் “காங்கிரஸ் ஆட்சியில்தான் மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் ஏமாற்றப்பட்டனர். ராகுல் காந்தி ட்ராக்டரில் சோபாவை போட்டு சொகுசாக செல்கிறார். அவருக்கு விவசாயம் பற்றி ஒன்றுமே தெரியாது. வெங்காயம் மண்ணுக்கு மேல் முளைக்குமா, தரைக்கு அடியில் முளைக்குமா என்பது கூட அவருக்கு தெரியாது” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

ஓபிஎஸ், பிரேமலதாவை அடுத்து முதல்வரை சந்திக்கிறாரா ராமதாஸ்.. விரிவாகி வரும் திமுக கூட்டணி?

பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி! - நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

வந்தேண்டா பால்காரன்..! மாட்டுத்தொழுவத்தை இடித்த எம்.எல்.ஏ.. அண்ணாமலை ரஜினி ஸ்டைலில் சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments