Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பசுக்களை பாதுகாக்க கோமாதா வரி! – மத்திய பிரதேச முதல்வர் அறிவிப்பு!

பசுக்களை பாதுகாக்க கோமாதா வரி! – மத்திய பிரதேச முதல்வர் அறிவிப்பு!
, செவ்வாய், 24 நவம்பர் 2020 (10:40 IST)
மத்திய பிரதேசத்தில் பசுக்களை பாதுகாக்க பசுக்கள் நல அமைச்சகம் அமைக்கவுள்ள நிலையில் புதிதாக கோமாதா வரியையும் கொண்டு வர உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் பசுக்களை பாதுகாக்கவும், பசுக்களின் நல மேம்பாட்டிற்காகவும் பசுக்கள் நல அமைச்சகம் என்ற புதிய துறை உருவாக்கப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் முன்னதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் பசுமாடுகள் வளர்ப்பு மற்றும் கொட்டகை பராமரிப்பு உள்ளிட்டவற்றிற்காக கோமாதா வரி என்ற புதிய வரியை அறிமுகப்படுத்த உள்ளதாக சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். மேலும் மக்களிடையே விலங்குகள் மீதான அக்கறை தற்போது மிகவும் குறைந்து வருவதாகவும், எனவே மக்களிடையே சிறிய அளவிலான தொகையை வரியாக பெறுவதாகவும் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேகமெடுத்த நிவர்: 7 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!