மதுராவில் கிருஷ்ணர் சிலை விவகாரத்தால் பரபரப்பு! – போலீஸார் குவிப்பு!

Webdunia
ஞாயிறு, 5 டிசம்பர் 2021 (09:47 IST)
உத்தர பிரதேசத்தில் மசூதி ஒன்றில் கிருஷ்ணர் சிலையை வைக்க உள்ளதாக இந்து அமைப்புகள் தெரிவித்துள்ள நிலையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் உள்ள மதுரா நகரில் கிருஷ்ணர் பிறந்ததாக இந்து மக்களிடையே நம்பிக்கை உள்ளது. அந்த பகுதியில் தற்போது ஒரு மசூதி உள்ளதாகவும், அந்த மசூதிக்குள் புகுந்து கிருஷ்ணர் சிலையை வைக்கப் போவதாகவும் வலதுசாரி அமைப்புகளான அகில பாரத இந்து மகா சபா, ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி நிர்மன் நியாஸ், ஸ்ரீகிருஷ்ண முக்தி தளம் மற்றும் நாராயணி சேனா ஆகிய நான்கு அமைப்புகளும் அறிவித்துள்ளன.

அவர்களுடைய மனுவை நிராகரித்த மாவட்ட நீதிமன்றம் அமைதியை சீர்குலைக்கும் எந்த செயலிலும் ஈடுபடக்கூடாது என எச்சரித்துள்ளது. நாளை டிசம்பர் 6ம் தேதியில் பாபர் மசூதி இடிப்பு சம்பவம் போன்ற எதுவும் நடந்துவிடக் கூடாது என பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மதுராவில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து பகுதிகளிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவார்களா?!.. என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?!...

கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?

'டிட்வா' புயலால் பாம்பனில் சூறைக்காற்று, தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல், பிரியங்கா தான்: அகமது படேலின் மகன் பகீர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments