Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மதிய உணவில் பல்லி : சாப்பிட்ட மாணவர்கள் நிலைமை என்ன ஆயிற்று..?

மதிய உணவில்  பல்லி : சாப்பிட்ட மாணவர்கள் நிலைமை என்ன ஆயிற்று..?
, வியாழன், 13 டிசம்பர் 2018 (15:08 IST)
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரியில் அரசு உயர் நிலை பள்ளி உள்ளது.நேற்று இங்கு வழக்கம், போல பள்ளியில் மதிய உணவு உண்ண மாணவன் ஒருவன் திடீரென்று மயக்கம் போட்டு விழுந்தான். அதன் பிறகுதான் அவன் உண்ட சாப்பாட்டில் பல்லி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடித்து 87 மாணவர்கள் தொடர்ச்சியாக மயக்கம் போட்டு விழுந்தனர். அவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.
 
மேலும் சாப்பாட்டில் பல்லி இருந்தது தெரியாமல் சாப்பிடு மயக்கம் போட்டு விழுந்த  மாணவன் மரணமடைந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
 
அனைத்து மாணவர்களும் தற்போது ஹரிபொம்மன் கள்ளி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றனர்.
 
பல்லி விழுந்து உணவை உண்ட  87 மாணவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தற்போது உடல்நிலை தேறி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
இதனையடுத்து மாணவர்களின் பெற்றோர், கல்வி அதிகாரிகள்,அமைச்சர்கள் ஆகியோர் மாணவர்களை சந்தித்து அவர்களின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தனர்.
 
மாணவர்கள் சாப்பாட்டில் பள்ளி விழுந்து, ஒருமாணவர்  பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூகுளில் மக்கள் அதிகம் தேடிய பிரபலங்கள் யார்...யார்...?