சந்திர கிரகணம்; திருப்பதி கோவில் நடை மூடுவதாக அறிவிப்பு!

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2023 (11:37 IST)
நாளை மறுநாள் நிகழும் சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி கோவில் மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.



நாளை மறுநாள் சந்திர கிரகணம் நடைபெறுகிறது. பொதுவாக சந்திர கிரகணம், சூரிய கிரகணம் போன்ற சமயங்களில் கோவில்கள் மூடப்படுவது வாடிக்கையான ஒன்று. அவ்வாறாக சந்திர கிரகணம் காரணமாக திருப்பதி கோவில் 8 மணி நேரத்திற்கு நடை மூடப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ வருகிற 29ம் தேதி அதிகாலை 1.05 தொடங்கி 2.22 மணிக்கு சந்திர கிரகணம் நிறைவடையும். கிரகண நேரத்திற்கு 6 மணி நேரம் முன்னதாக கோவில் நடை மூடப்படுவது வழக்கம்.

அதன்படி 28ம் தேதி இரவு 7.05 மணிக்கு திருப்பதி ஏழுமலையான கோவில் நடை மூடப்படும். 29ம் தேதி அதிகாலை 3.15 மணிக்கு நடை திறக்கப்பட்டு, கிரகண பரிகார பூஜை, சுப்ரபாத சேவை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: 150 எம்பிக்கள் கையெழுத்திட்ட தீர்மானம்..

பெயின்டிலிருந்து ரசாயணம் தாக்கி இரு தொழிலாளர்கள் மயக்கம்.. போலீஸார் தீவிர விசாரணை

தேசிய கபடி வீராங்கனை தற்கொலை.. தலைமறைவான கணவரை தேடும் போலீசார்..!

வந்தே மாதரம் விவாதம்.. பிரியங்கா காந்திக்கு பதிலடி கொடுத்த அமித்ஷா..!

தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும்.. விஜய் ஆவேசம்,..

அடுத்த கட்டுரையில்
Show comments