Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லோயர் பர்த் இனி இவங்களுக்கு மட்டும் தான்: ரயில்வே துறையின் புதிய விதிமுறைகள்..!

Mahendran
திங்கள், 29 ஜனவரி 2024 (10:07 IST)
லோயர் பர்த் ஒதுக்குவதில் இனி சில விதிமுறைகள் கடைபிடிக்கப்படும் என ரயில்வே துறையை தெரிவித்துள்ளது

ரயிலில் இனிமேல் லோயர் பர்த் என்பது கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி லோயர் பர்த்தில் வயதான பெண்கள் கர்ப்பிணி பெண்கள் இருக்கும்போது மிடில் பத்தில் இருப்பவர்கள் பத்து மணிக்கு பின்னர் தான் தூங்க வேண்டும். அதுவரை லோயர் சீட்டில் இருப்பவர் உடன் அமர வேண்டும் என்றும்  பத்து மணிக்கு முன்பு மிடில் சீட்டை தூக்கி  தூங்க முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஒருவேளை லோயர் சீட்டில் இருப்பவர் உங்களை பத்து மணிக்கு முன்பே தூங்க அனுமதித்தால் நீங்கள் தாராளமாக தூங்கிக் கொள்ளலாம் இல்லையென்றால் 10:00 மணி வரை நீங்கள் காத்திருந்து அதன் பின் தான்  மிடில் இருக்கைகளை நீங்கள் பயன்படுத்த முடியும் என்றும் ரயில்வே துறையை தெரிவித்துள்ளது.

அதேபோல்  அப்பர் பர்த்தில் இருப்பவர்களுக்கு இந்த பிரச்சனை கிடையாது, எப்போது வேண்டுமானாலும் அவர் தூங்கிக் கொள்ளலாம். ஆனால் அதே நேரத்தில் 10 மணிக்கு மேல் லைட்டை எரிய விடக்கூடாது என்றும் ரயில்வே துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரம்மோஸ் ஏவுகணை வாங்க போட்டி போடும் உலக நாடுகள்.. சீனா அதிர்ச்சி.

இந்திய வணிகர்களின் அதிரடி முடிவு.. துருக்கியின் ரூ.1500 கோடி வணிகம் போச்சா?

நேற்று 2 முறை சரிந்த தங்கம்.. இன்று 2 முறை உயர்ந்தது.. இப்போதைய விலை நிலவரம்..!

நாங்கள் போரில் தோல்வி அடைந்தது உண்மைதான்: பாகிஸ்தான் பத்திரிகையாளர் தகவல்..!

தீவிரவாதியின் இறுதிச்சடங்கில் பங்கேற்றோமா? பாகிஸ்தான் ராணுவம் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments