Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

Prasanth K
ஞாயிறு, 6 ஜூலை 2025 (18:36 IST)

உலக நாடுகள் இடையே கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து போர் நிகழ்ந்து வரும் நிலையில் இது மக்களிடையேயான சகோதரத்துவத்தை அழித்து வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை தெரிவித்துள்ளார்.

 

நாக்பூரில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர் “ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர்கள் உலகம் முழுவதும் பெரும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக போர் எப்பொழுது வேண்டுமானாலும் நிகழலாம் என்ற நிலை உள்ளது. ட்ரோன்கள், ஏவுகணைகள் போரின் போக்கை மாற்றியுள்ளன.

 

இவை அனைத்திற்கும் மத்தியில் மனிதகுலம் காப்பாற்றப்படுவது மிகவும் கடினம், பெரும்பாலும் பொதுமக்கள் வாழிடங்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுகின்றன. இந்த பிரச்சினைகளை உலக அளவில் விவாதிக்க வேண்டிய தேவை உள்ளது. இவை மெதுவாக அழிவுக்கு இட்டுச் செல்கின்றன. வல்லரசு நாடுகளின் சர்வாதிகாரத்தால் ஒருங்கிணைப்பு, நல்லிணக்கம் மற்றும் அன்பு ஆகியவை மறைந்து வருகின்றன” என்று கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மத்திய அரசு வழங்கிய 900 மின் பேருந்துகள்! வாங்க மறுத்த தமிழகம்! - என்ன காரணம்?

இந்தியா இரக்கமே இல்லாமல் வரி விதித்துக் கொல்கிறது! இப்படி பண்ணலைன்னா..? - ட்ரம்ப் ஆதங்கம்!

வரிவிதிப்பால் ஏற்பட்ட இழப்பு: 200 பில்லியன் செட்டில்மெண்ட் கேட்கும் நிறுவனங்கள்! - பதுங்கிய ட்ரம்ப்!

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நியாயம் கேட்ட முதியவருக்கு அடி, உதை! - அன்புமணி கண்டனம்!

ஒரு ரூபாய்க்கு ஒரு சிம்கார்டு.. பி.எஸ்.என்.எல். வழங்கிய அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments