Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுரோட்டில் கவிழ்ந்த பீர் லாரி.. போட்டி போட்டு பாட்டில்களை அள்ளி சென்ற குடிமகன்கள்..!

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2023 (12:50 IST)
ஆந்திர மாநிலத்தில் நடுரோட்டில் பீர் பாட்டில் ஏற்றி வந்த லாரி திடீரென கவிழ்ந்ததை அடுத்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பீர் பாட்டில்களை அள்ளிக்கொண்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆந்திர மாநிலத்தில் உள்ள அனகாபள்ளி என்ற குடோனிலிருந்து நர்சப்பட்டினம் என்ற பகுதிக்கு பீர் பாட்டில் லோடு ஏற்றி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் திடீரென லாரி கவிழ்ந்ததை அடுத்து அந்த லாரியில் ஏற்றப்பட்டிருந்த பீர் பாட்டில் பெட்டிகள் கீழே விழுந்து சிதறின. 
 
இதனை அடுத்து நடுரோட்டில் பீர் பாட்டில்கள் கிடந்ததை பார்த்த அந்த பகுதி மக்கள் உடனடியாக ஓடி வந்து பீர் பாட்டில்களை அள்ளி சென்றனர். ஒரு சிலர் பெட்டி பெட்டியாக எடுத்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
லாரி கவிழ்ந்த நிலையில் லாரி டிரைவருக்கு என்ன ஆச்சு என்பதை ஒரு குடிமகன்கள் கூட கவலை கொள்ளாமல் பீர் பாட்டில்களை எடுத்துக்கொண்டு செல்வதிலேயே கவனத்துடன் இருந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராணுவம் பற்றி அவதூறாகப் பேசுவது பேச்சு சுதந்திரமா? ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்..!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்திற்கு பெங்களூரு போலீஸ் அனுமதி மறுப்பு.. அப்புறம் எப்படி நடந்தது?

மீண்டும் ஒரு சவரன் ரூ.73,000ஐ தாண்டியது.. இன்று ஒரே நாளில் 320 ரூபாய் உயர்வு..!

தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய இ-ஆதார் கட்டாயம் என மத்திய ரயில்வே அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரையில்
Show comments