Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு நடைபெற்ற வன்முறை: ஊரடங்கு உத்தரவு அறிவிப்பு..!

Webdunia
வெள்ளி, 3 மார்ச் 2023 (08:08 IST)
வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு நடைபெற்ற வன்முறை: ஊரடங்கு உத்தரவு அறிவிப்பு..!
வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு வன்முறை நடைபெற்றதை அடுத்து மேகாலயாவில் உள்ள ஒரு சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மேகாலயா, திரிபுரா மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன என்பதும் முடிவுகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருந்தன என்பதில் தெரிந்ததே. இந்த நிலையில் உள்ள மேற்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தின் சஹ்ஸ்னியாங்  என்ற கிராமத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென இரு பிரிவினருக்கு இடையே வன்முறை ஏற்பட்டது 
 
வாக்கு எண்ணிக்கை பிறகு நடைபெற்ற வன்முறை காரணமாக அந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தேவையில்லாமல் மூன்று பேருக்கு மேல் பொது இடங்களில் கூட கூடாது என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேகாலயா மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்தபோது பெரும் வன்முறை ஏற்பட்டது அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் நிலைமை தற்போது கட்டுக்குள் இருப்பதாகவும் இயல்பு நிலை திரும்பி வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்ஸ்டாகிராம்ல சின்ன பசங்க அதை பண்ண முடியாது! - புதிய கட்டுப்பாடுகள்!

இன்று ஒரே நாளில் ரூ.1200 உயர்ந்த தங்கம் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

தஹாவூர் ராணா நாடு கடத்தல்.. டெல்லிக்கு வருவதால் உச்சகட்ட பாதுகாப்பு..!

13 வயது சிறுமிகளை காதல் வலை.. வன்கொடுமை செய்த 14 பேர்? - அதிர்ச்சி சம்பவம்!

உலகம் முழுவதும் உச்சத்தில் செல்லும் பங்குச்சந்தை.. இந்திய முதலீட்டாளர்களுக்கு மட்டும் சோகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments