Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜம்மு காஷ்மீரில் 11 மாவட்டங்களில் ஊரடங்கு: வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (07:44 IST)
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் தினமும் மூன்று இலட்சத்திற்கும் அதிகமானோர் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் தற்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது
 
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 11 மாவட்டங்களில் மே மாதம் மூன்றாம் தேதி காலை 7 மணி வரை ஊரடங்கு உத்தரவு என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் அம்மாநிலத்தில் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், கொரோனா வைரஸால் 26 பேர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து இன்று முதல் மே மாதம் மூன்றாம் தேதி வரை ஊரடங்கு என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கின்போது பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் மீறி தேவையில்லாமல் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments