Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூரில் இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு: ஐடி ஊழியர்களுக்கு சிக்கல்!

Webdunia
வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (07:59 IST)
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது இரவு நேர ஊரடங்கு ஆகஸ்ட் 16 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளது
 
கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பெங்களூரில் பரவி வருவதை அடுத்து இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடந்த சில நாட்களாக இந்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது வார இறுதி நாட்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் வார இறுதி ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் மகாராஷ்டிரா மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்குள் நுழைய கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது
 
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் பெங்களூர் பெங்களூரில் 1769 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments