Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் செயல்பட தடை! – மத்திய அரசு!

Webdunia
வியாழன், 2 ஜூலை 2020 (13:46 IST)
நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கல்வி நிறுவனங்களுக்கான தடை தொடரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஊரடங்கில் முதற்கட்ட தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது இரண்டாம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி உள்துறை அமைச்சகத்தால் அனுமதி அளிக்கப்பட்ட போக்குவரத்து வசதிகளை தவிர சர்வதேச விமான பயணங்கள், ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி மற்றும் கல்வி நிறுவனங்களை தொடங்குவதற்கான தடை தொடர்கிறது. அரசியல் கூட்டங்கள், மத நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றிற்கான தடையும் தொடர்கிறது.

மேற்கண்ட நடவடிக்கைகளை தொடங்குவதற்கான தேதிகள் மற்றும் விதிமுறைகள் பின்னர் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments