Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"டிசிபி ஜிந்தாபாத்" என்கவுண்டர் இடத்தில் மலர் தூவி மக்கள் ஆரவாரம்!!

Webdunia
வெள்ளி, 6 டிசம்பர் 2019 (11:27 IST)
ஹைதராபாத் பொதுமக்கள் என்கவுண்டர் நடந்த இடத்தில் போலீஸாருக்கு மலர் தூவி, ஆரவாரமிட்டு மகிழ்ச்சியை வெளியிப்படுத்தியுள்ளனர். 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் தேசத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது சம்பந்தமாக நால்வரை கைது செய்தது போலீஸ் தரப்பு. 
 
கைது செய்யப்பட்டவர்களிம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இன்று விசாரணைக்காக பெண் மருத்துவரின் உடல் கண்டெக்கப்பட்ட இடத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது அவர்கள் தப்பிக்க முற்பட்டதால் காலை 3 மணி அளவில் சுட்டுக்கொள்ளப்பட்டனர். 
இந்த என்கவுண்டரில் மூன்று காவல்துறையினரும் காயமடைந்து மருத்துவனமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த நால்வரும் சுட்டுக்கொள்ளப்பட்டதற்காக சைபராபாத் காவல் ஆணையர் சய்ஜனாருக்கு பொதுமக்கள் பாரட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 
 
இந்த என்கவுண்டரை அம்மாநில மக்கள் கொண்டாடி வரும் நிலையில், என்கவுண்டர் நடந்த இடத்தில் போலீஸாரின் மீது மலர் தூவியும் ’டிசிபி ஜிந்தாபாத்’ என கோஷமிட்டு மகிழ்ச்சிய வெளிப்படுத்தி வருகின்றனர். அதேபோல சாலையில் பெண்கள் கல்லூரி பேருந்தில் சென்றுக்கொண்டிருந்த பெண்கள் போலீஸாரை கண்டதும் கையசைத்து கோஷமிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி சென்றுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்