Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி மதுகுடிப்போருக்கான வயது வரம்பு உயர்வு!!

Webdunia
வியாழன், 7 டிசம்பர் 2017 (16:57 IST)
கேரளாவில் மது குடிப்போருக்கான குறைந்த பட்ச வயது வரம்பை 21-ல் இருந்து 23 ஆக அதிகரிக்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. 
 
கேரளாவில், பினராயி தலைமையிலான மாநில அரசு, மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தி வருகிறது. தற்போது நடைமுறையில் இருக்கும் மதுகுடிப்போருக்கான 21 வயது என்பதை 23 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு கடந்த 2013 ஆம் ஆண்டு கேரளாவில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்தது. அதனை தொடர்ந்து கேரளாவில் மது விலக்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி 730 பார்கள் மற்றும் மது கடைகள் மூடப்பட்டன.
 
இந்நிலையில் பினராய் விஜயன் தலைமையில் கம்யூனிஸ்ட் ஆட்சி மதுவிலக்கை வாபஸ் பெற அலோசனை செய்தது. அதன் படி கடந்த ஜூன் மாதம் கேரளாவில் இருந்த மது விலக்கு வாபஸ் பெறப்பட்டது. 
 
கேரளாவில் மது குடிப்போருக்கான வயது 21 லிருந்து 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இளைஞர்கள் சிறு வயதிலேயே மதுகுடிக்க துவங்கிவிடுவதால் இந்த முடிவு எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments