Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில்வே ஸ்டேசன் அருகே உலா வரும் சிங்கம்! – வைரலாகும் வீடியோவால் பரபரப்பு!

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2021 (13:25 IST)
குஜராத் மாநிலம் ஜுனாகத் பகுதியில் மக்கள் நடமாடும் பகுதிகளில் சிங்கம் ஒன்று உலா வரும் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியாவில் சிங்கங்களுக்கான பூங்காவாக அரியப்படுவது குஜராத்தில் உள்ள கிர் தேசிய பூங்கா. இந்நிலையில் கிர் பூங்காவை சுற்றியுள்ள பகுதிகளில் சிங்கங்களின் நடமாட்டம் அடிக்கடி தென்படுவது வாடிக்கை. இந்நிலையில் கிர் தேசிய பூங்காவிலிருந்து 80கிமீ தொலைவில் உள்ள ஜுனாகத் நகரில் மக்கள் வாழும் பகுதிகளில் சிங்கம் ஒன்று இரவு நேரங்களில் உலா வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ஜுனாகத் பகுதியில் ரயில்வே நிலையம் எதிரே உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றின் நுழைவு பாதையின் தடுப்புகளை சிங்கம் தாவி குதித்து சாவகாசமாக சாலையில் செல்வதும், வளாகத்தில் உள்ள கார்களின் நடுவே நடந்து செல்வதும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments