இடி மின்னல் தாக்கி மக்கள் 30 பேர் உயிரிழப்பு ! அதிர்ச்சி தகவல்

Webdunia
வியாழன், 27 ஜூன் 2019 (20:40 IST)
இந்தியா மூன்று பக்கம் கடல்களாலும், ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்டுள்ளது. அதனால் நம் நாட்டில்  குளிர் ,வெப்பம் ஆகிய  பருவ காலங்கள் மாறி மாறி வருகின்றது.  ஆனால் மழை பெய்ய வேண்டிய உரிய பருவகாலத்தில் பொய்த்துபோவதுதான் மக்களை பெரிதும் பாதிக்கிறது. 
வழக்கமாக ஜூன் மாதத்தில் பெய்ய வேண்டிய தென்மேற்குப் பருவமழையானது, செப்டம்பர் வரை இருக்கும். அதனால் விவசாயத்திற்கு போதுமான மழையும் தாராளமாகக் கிடைக்கும்.ஆனால் இந்த முறை தென்மேற்குப் பருவமழையானது பொய்த்துவிட்டது.
 
இருப்பினும் ஒரு சில இடங்களில் மழை பெய்துவருகிறது, கடும் வெய்யில் அடித்த சென்னையிலும் சில நாட்களாக மழை பெய்துவருகிறது.மற்ற மாநிலங்களிலும் மழை பெய்துவருகிறது.
 
இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பீகார் மாநிலத்தில் பெய்த மழையின் போது, இடி மின்னல் தாக்கியதில் 30 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகிறது.மேலும் 12 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.இந்த தகவலை அம்மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
மின்னல் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அரசு தலா ரூ. 4 லட்சம் நிதி வழங்க உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2000 நோட்டுகளில் 'பண மழை' : பெங்களூருவில் நூதன மோசடி செய்த 10 பேர் கைது!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தோல்வி: முதல் நாளே தோல்வியா? என்ன நடந்தது?

இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 500 புள்ளிகளுக்கு மேல் சரிவு.. இதுதான் காரணமா?

சாம்சங் கேலக்ஸி AI-இல் குஜராத்தி உள்பட 22 மொழிகள்.. மேலும் என்னென்ன வசதிகள்?

ரயில்வே பணியாளரிடம் பெட்சீட் கேட்ட ராணுவ வீரர் கொலை.. ஏசி கோச்சில் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments