Publish Date: Wed, 26 Jun 2019 (15:11 IST)
Updated Date: Wed, 26 Jun 2019 (15:12 IST)
நியுசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடக்க இருந்த போட்டி மழையால் இப்போது தாமதமாகியுள்ளது.
உலகக்கோப்பைத் தொடரில் இன்று பாகிஸ்தான் மற்று நியுசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர். இதில் நியுசிலாந்து அணி கிட்டத்தட்ட அரையிறுதிக்குத் தகுதிப் பெற்றுவிட்ட நிலையில் பாகிஸ்தான் அணி இனிவரும் அனைத்துப் போட்டிகளையும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
பிரிம்மிங்ஹாமில் 3 மணிக்குத் தொடங்குவதாக இருந்த போட்டி மழைக் காரணமாக இன்னும் டாஸ் கூட வீசப்படாமல் உள்ளது. போட்டித் தொடங்குவது தொடர்பாக நடுவர்கள் மைதானத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தற்போதையக் கணிப்புப் படி ஆட்டம் ஒன்றரை மணிநேரம் தாமதமாகத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உலகக்கோப்பையில் இதுவரை 3 போட்ட்டிகள் மழைக் காரணமாகக் கைவிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.