Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொதுமக்களை அச்சுறுத்தும் சிறுத்தைப் புலி....வைரலாகும் வீடியோ

ASSAM
, செவ்வாய், 27 டிசம்பர் 2022 (15:02 IST)
அசாமின் ஜோர்ஹத் மாவட்டம் தியோக் பகுதி அருகில் செனிஜான் என்ற இடத்தின் மழைக்காடு ஆய்வு மையம் உள்ளது.

இந்தப் பகுதியில் சுற்றித் திரிந்து வரும் ஒரு சிறுத்தைப் புலி, அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வருகிறது.

இந்த நிலையில்,  இந்தச் சிறுத்தைப் புலி குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன் லால் மீனா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

3 வனத்துறை உள்பட 13 பேரை இந்தச் சிறுத்தைப் புலி தாக்கியுள்ளது. அவரக்ள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சிலர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீட்டிற்குச் சென்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், இந்தச் சிறுத்தைப் புலி சமீபத்தில் அங்குள்ள ஆய்வு மையம் பகுதி அருகில், பல அடி உயரமுள்ள சுற்றுச்சுவரைத் தாண்டி தப்பிச் சென்றதாகவும் கூறியுள்ளார்.

இந்த சிறுத்தைப் புலியை விரைவில் பிடிக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Edited By Sinoj


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சொத்து வரி உயர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு