Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊருக்குள் புகுந்து தாக்கிய சிறுத்தை; சிதறி ஓடும் மக்கள்! – வைரல் வீடியோ!

Webdunia
வெள்ளி, 4 நவம்பர் 2022 (13:28 IST)
கர்நாடகாவில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை பலரை தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் மைசூர் பகுதியில் உள்ள கனகா நகர் என்ற பகுதியில் சிறுத்தை ஒன்று புகுந்தது. சிறுத்தையை கண்ட மக்கள் பலர் வீடுகளுக்குள் புகுந்ததுடன், வனத்துறைக்கும் தகவல் அளித்துள்ளனர்.

அதற்குள்ளாக சிறுத்தை மக்கள் குடியிருப்பு பகுதியில் நடமாட தொடங்கியுள்ளது. ஒரு சிலர் சிறுத்தையை விரட்ட முயன்றுள்ளனர். ஆனால் பாய்ந்து சென்ற சிறுத்தை வழியில் எதிர்பட்டவர்களை தாக்கிவிட்டு மீண்டும் புதர்களுக்குள் சென்று பதுங்கியுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த வனத்துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் அந்த ஆண் சிறுத்தையை பாதுகாப்பாக பிடித்து சென்றுள்ளனர். சிறுத்தை சிலரை துரத்தி சென்று தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments