ஊருக்குள் புகுந்து தாக்கிய சிறுத்தை; சிதறி ஓடும் மக்கள்! – வைரல் வீடியோ!

Webdunia
வெள்ளி, 4 நவம்பர் 2022 (13:28 IST)
கர்நாடகாவில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை பலரை தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் மைசூர் பகுதியில் உள்ள கனகா நகர் என்ற பகுதியில் சிறுத்தை ஒன்று புகுந்தது. சிறுத்தையை கண்ட மக்கள் பலர் வீடுகளுக்குள் புகுந்ததுடன், வனத்துறைக்கும் தகவல் அளித்துள்ளனர்.

அதற்குள்ளாக சிறுத்தை மக்கள் குடியிருப்பு பகுதியில் நடமாட தொடங்கியுள்ளது. ஒரு சிலர் சிறுத்தையை விரட்ட முயன்றுள்ளனர். ஆனால் பாய்ந்து சென்ற சிறுத்தை வழியில் எதிர்பட்டவர்களை தாக்கிவிட்டு மீண்டும் புதர்களுக்குள் சென்று பதுங்கியுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த வனத்துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் அந்த ஆண் சிறுத்தையை பாதுகாப்பாக பிடித்து சென்றுள்ளனர். சிறுத்தை சிலரை துரத்தி சென்று தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பால் விவசாயிகளுக்கு ரூ.3 கோடி தீபாவளி ஊக்கத்தொகை! - முதல்வர் அறிவிப்பு!

சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டிஜிபி அலுவலகத்திற்கு வந்த இமெயிலால் பரபரப்பு..!

விஜய்யுடன் புஸ்ஸி ஆனந்த் திடீர் சந்திப்பு.. 20 நிமிடங்கள் ரகசிய பேச்சுவார்த்தை..!

சென்னையில் நாளை முதல் மழை தீவிரமாகும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments