Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’தகுதியில்லாமல் பதவிக்கு வந்த மோசமானவர்’’….முதல்வரை விமர்சித்த முன்னணி நடிகை !

Webdunia
திங்கள், 26 அக்டோபர் 2020 (15:37 IST)
மராட்டிய முதல்வரை தகுதியில்லாமல் பதவிக்கு வந்த மோசமானவர் என விமர்சித்துள்ளார் நடிகை கங்கனா ரணாவத்.

சுஷாந்த் மரணம் தொடர்பான கருத்துகள், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு சிவசேனாவுடன் மோதல் என பாலிவுட்டில் இப்போது கங்கனா மோதாத நபர்களே இல்லை என்ற அளவுக்கு எல்லோருடனும் சண்டை போட ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் மாநகராட்சி விதிகளை மீறி கங்கனாவின் அலுவலகம் கட்டப்படுவதாக மும்பை நகராட்சி கட்டிடத்தின் ஒரு பகுதியை இடித்தது.

சமீபத்தில்  மதக் கலவரத்தை தூண்டும் விதமாக பேசியதாக அவர் மீதும் அவர் சகோதரி மேலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது..

இந்த வழக்கை விசாரித்த மும்பை பாந்த்ரா பெருநகர மாஜிஸ்திரேட், நடிகை  கங்கணா மற்றும் அவரது சகோதரி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பித்ததை அடுத்து அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது .

இந்நிலையில் நடிகை கங்கனா ரணாவத் தற்போது மராட்டிய முதல்வர்  உத்தவ் தாக்கரேவை விமர்சித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற தசரா விழாவில் கலந்துகொண்ட மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே, நடிகை கங்கனா ரணாவத்தின் சொந்த மாநிலமான இமாச்சல் பிரதேசத்தில் கஞ்சா அதிகம் விளைகிறது எனத் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த நடிகை கங்கனா. அப்பாவின் சொத்துகளையும் பதவிகளையும் அனுபவித்தவள் நானில்லை…மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே வாரிசு அடிப்படையில் வந்த தகுதியில்லாவர் என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments