மோடிக்கு குழந்தைகள் இல்லை... வாரிசு அரசியல் குறித்த பேச்சுக்கு லல்லு பதிலடி!

Webdunia
வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (20:05 IST)
பிரதமர் நரேந்திர மோடி எழுப்பிய வாரிசு அரசியல் விமர்சனத்திற்கு ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் பதில் அளித்துள்ளார். 

 
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பட்ஜெட் மீதான பல்வேறு விவாதங்களும், பிற நிகழ்வுகள் குறித்த உரையாடல்களும் நடந்து வருகிறது. இந்நிலையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி, வாரிசு அரசியலால் மற்றவர் திறமை புறக்கணிக்கப்படுகிறது. காங்கிரஸ் இல்லையென்றால் வாரிசு அரசியல் இருந்திருக்காது, ஊழல் இருந்திருக்காது என்று பேசினார். 
 
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி எழுப்பிய வாரிசு அரசியல் விமர்சனத்திற்கு ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் பதில் அளித்துள்ளார். அதில், பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் வாரிசு அரசியல் நிலவுவதாகவும், வாரிசு அரசியல் ஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரி என்றும் பிரதமர் கூறியிருந்தார். மேலும், பிகாரின் தற்போதைய முதல்வர் நிதிஷ் குமார் தன் குடும்ப உறுப்பினர்களை அரசியலுக்குள் கொண்டு வராதது குறித்தும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்திருந்தார்.
 
மேலும் மோடிக்கு குழந்தைகள் இல்லை. நிதிஷின் மகன், அரசியல் மீது வெறுப்பு கொண்டவர். பிரதமருக்கும் நிதிஷுக்கும் தலைமுறை தழைத்து, அவர்களின் அரசியல் மரபை முன்னெடுத்துச் செல்லட்டும் என ஒருவர் வேண்டிக்கொள்ள மட்டுமே முடியும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹலால் சான்றிதழ் பெற்ற பொருட்களை தவிர்க்கவும்: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கையால் பரபரப்பு!

ஜெய்ஷ்-இ-முகமதுவின் பெண்கள் 'ஜிஹாத்' ஆன்லைன் பயிற்சி வகுப்பு: மசூத் அஸ்ஹர் சகோதரி தொடங்கினாரா?

ஏர் இந்தியாவின் முக்கிய அதிகாரி தங்கியிருந்த அறையில் மர்ம மரணம்: தற்கொலை குறிப்பும் இல்லை!

இதுகூட தெரியவில்லையா? ஆர்ஜேடி வேட்பாளர் ஸ்வேதா சுமன் வேட்புமனு நிராகரிப்பு..!

மாணவர்களை 3 மணிக்கே வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள்: மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments