Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”இங்க யாருக்குமே கொரோனா கிடையாது” – அசால்ட்டாய் இருந்த பாஜக தலைவருக்கு கொரோனா!

Webdunia
திங்கள், 19 அக்டோபர் 2020 (11:48 IST)
மேற்கு வங்கத்தில் கொரோனாவே இல்லை என்று பேசிய பாஜக மூத்த தலைவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலால் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் பாஜக – திரிணாமூல் காங்கிரஸ் இடையே அடிக்கடி மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் பாஜக நடத்திய பேரணியை கொரோனா காரணமாக போலீசார் கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்த நிலையில் பாஜக மூத்த தலைவர் திலிப் கோஷ், மேற்கு வங்கத்தில் கொரோனா இல்லை என்றும், அரசியலுக்காக சிலர் கொரோனாவை பயன்படுத்திக் கொள்வதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் தற்போது திலிப் கோஷூக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. அதை தொடர்ந்து அவர் கொல்கத்தாவின் சால்ட் லேக் சிட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத் விமான விபத்து: 50 உடல்கள் மீட்கப்பட்டதாக தகவல்.. 7 குழந்தைகள் நிலை என்ன?

விபத்துக்குள்ளான விமானத்தில் முன்னாள் குஜராத் முதல்வர் பயணம் செய்தாரா? பயணிகள் லிஸ்ட்டில் அதிர்ச்சி தகவல்..!

Ahmedabad plane crash: விமானம் விபத்துக்குள்ளானது எப்படி? கடைசி நொடிகள்! வெளியான அதிர்ச்சி வீடியோ!

Breaking: அகமதாபாத் விமான விபத்து! முதலமைச்சருக்கு போன் செய்த அமித்ஷா! ஏர் இந்தியா வெளியிட்ட அறிவிப்பு!

இன்று மாலை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments