Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேலும் ஒரு திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று உறுதி!

Webdunia
திங்கள், 19 அக்டோபர் 2020 (11:40 IST)
மேலும் ஒரு திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று உறுதி!
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்துவருகிறது. நேற்று தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின் 4 ஆயிரத்துக்கும் குறைவான கொரோனா பாதிப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இருப்பினும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் விஐபிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருவது பெரும் கவலையை தருகிறது. ஏற்கனவே தமிழகத்தைச் சேர்ந்த எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் ஒரு சிலர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் டிஆர் பாலு அவர்களின் மகனும் தற்போதைய மன்னார்குடி திமுக எம்எல்ஏவுமான டிஆர்பி ராஜா அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments