Webdunia - Bharat's app for daily news and videos

Install App

500, 1000 ரூபாய் தடையில் மூளை வேலை செய்யாத மத்திய அரசு: கொல்கத்தா நீதிமன்றம் சாடல்!

500, 1000 ரூபாய் தடையில் மூளை வேலை செய்யாத மத்திய அரசு: கொல்கத்தா நீதிமன்றம் சாடல்!

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2016 (15:57 IST)
500, 1000 ரூபாயை தடை செய்த மத்திய அரசு அதற்கு பதிலாக புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது. இவற்றை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசின் மூளை சரியாக வேலை செய்யவில்லை என கொல்கத்தா நீதிமன்றம் சாடியுள்ளது.


 
 
கடந்த 8-ஆம் தேதி இரவு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதனையடுத்து பழைய நோட்டுகளை மாற்றவும், வங்கிகளில் பணம் எடுக்கவும் வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பொது மக்கள் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் இந்த ரூபாய் நோட் தடைக்கு எதிராக கொல்கத்தா நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று வந்தது. இதில் கருத்து சொல்லிய நீதிபதிகள், ரூபாய் நோட்டுக்கு தடை விதிக்கும் நடவடிக்கையை முறையாக அமல்படுத்துவதில் மத்திய அரசின் மூளை சரியாக வேலை செய்யவில்லை என சாடியுள்ளனர்.
 
மேலும், நாள்தோறும் விதிமுறைகளை மாற்றிக்கொண்டு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். வங்கியில் பணம் மாற்றம் செல்ல பொதுமக்களிடம் வங்கி ஊழியர்கள் பொறுப்பின்றி நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டினார். இந்த விஷயத்தில் அரசின் கொள்கையில் மாற்றம் கொண்டுவர நீதிமன்றத்தால் முடியாது என நீதிபதிகள் கூறினர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடியை அடுத்து அமெரிக்காவுக்கு செல்லும் நிர்மலா சீதாராமன்.. டிரம்ப் உடன் சந்திப்பு இல்லையா?

தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை போக்குவரத்து மாற்றம்.. மாற்று வழிகள் என்ன?

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படை தவெக தான்: விஜய் பெருமிதம்..!

பேருந்துக்காக காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக்கொலை.. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்..!

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments