Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக அமைச்சரின் காரில் கட்டு கட்டாய் 500, 1000 ரூபாய் நோட்டுகள்: 92 லட்சம் பறிமுதல்!

பாஜக அமைச்சரின் காரில் கட்டு கட்டாய் 500, 1000 ரூபாய் நோட்டுகள்: 92 லட்சம் பறிமுதல்!

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2016 (15:14 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒஸ்மனாபாத் மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த மாநில பாஜக அமைச்சர் ஒருவரின் காரில் 92 லட்சம் ரூபாய் மதிப்பிலான 500, 1000 ரூபாய் நோட்டுகள் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வழக்கமாக வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் 92 லட்சம் ரூபாய் மதிப்பிலான பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளது.
 
இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க எடுத்து செல்லுவதாக கூறியுள்ளனர். ஆனால் அதற்கான எந்த ஆவணமும் அவர்களிடம் இல்லாததால் அந்த பணம் கைப்பற்றப்பட்டு மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 
பணம் கைப்பற்றப்பட்ட கார் அந்த மாநில கூட்டுறவுத்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான சுபாஷ் தேஷ்முக்கின் கார் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக அமைச்சரின் காரிலேயே பணம் சிக்கியது அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

இந்தியா - பாகிஸ்தான் போரில் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.. டிரம்ப் மீண்டும் சர்ச்சை..!

கொழுந்தனுடன் கள்ளக்காதல்.. கணவனை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments