Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரி துணை நிலை ஆளுநரானார் கிரண் பேடி: குடியரசுத் தலைவர் உத்தரவு

Webdunia
திங்கள், 23 மே 2016 (09:24 IST)
நாட்டின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியும், பாஜக தலைவர்களில் ஒருவருமான கிரண் பேடி புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவித்தார்.


 
 
புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக இருந்த வீரேந்திர கட்டாரியா கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12-ஆம் தேதி நீக்கப்பட்டார். இதுவரை நியமிக்கப்படாத இந்த பதவிக்கு தற்போது கிரண் பேடி நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அந்தமான்-நிகோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் அஜய் சிங் கூடுதல் பொறுப்பாக புதுச்சேரியை கவனித்து வந்தார்.
 
தற்போது புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமிக்கப்படுள்ள கிரண் பேடி இது குறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். என் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது என்றார் அவர்.
 
மிஸோரம், கோவா, சண்டீகர் ஆகிய பகுதிகளில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றினேன் ஆனால், அந்தமான் மற்றும் புதுச்சேரியில் பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதை எனக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பாக பார்க்கிறேன் என்றார் கிரண் பேடி.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலஸ்தீனர்களுக்கு ஜோர்டானில் இடம், காசாவையும் வளைக்கும் இஸ்ரேல்!? - ட்ரம்ப் முடிவால் அதிர்ச்சி!

ஏழை, எளிய மக்களுக்கு எதுவுமே இல்ல..? பட்ஜெட் மிகப்பெரிய ஏமாற்றம்! - தவெக தலைவர் விஜய்!

மகிழ்ச்சி மற்றும் ஏமாற்றம்.. மத்திய பட்ஜெட் குறித்து அன்புமணி ராமதாஸ்..!

சட்டவிரோதமாக தங்கிய வங்கதேசத்தினர் நாடு கடத்தல்.. காவல்துறை உயர் அதிகாரி தகவல்..!

குழந்தை பெற்று குப்பை தொட்டியில் வீசிய கல்லூரி மாணவி: தஞ்சை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments