Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெண்ணந்தூர் அருகே அதிமுக தொண்டர் கொடூரக்கொலை

Webdunia
திங்கள், 23 மே 2016 (08:54 IST)
அதிமுக தொண்டர் ஒருவர் வெண்ணந்தூர் அருகே கல்லால் தக்கப்பட்டு கொடூரமாக நேற்று கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இந்த கொலையை செய்த மர்ம நபர்கள் யார் என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


 
 
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே வெண்ணாந்தூர் சர்க்கார் தோப்பு பகுதியை சேர்ந்த அதிமுக தொண்டரான 55 வயதான மெய்யழகன் சமையல் செய்யும் தொழில் செய்து வருகிறார்.
 
இந்நிலையில் அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் நேற்று அவர் மது அருந்த சென்றார். சென்றவர் வீடு திரும்பாததால் அவருடைய மகன் ஊரெங்கும் தேடியுள்ளார்.
 
இந்த நிலையில் வெண்ணந்தூர் ஏரிக்கரையில் ஒருவர் முகத்தில் கல்லால் தாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த தகவல் கிடைத்து அவரது மகன் சென்று பார்த்த போது தந்தை மெய்யழகன் பிணமாக கிடந்தது தெரியவந்தது.
 
இதனையடுத்து காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, வெண்ணந்தூர் காவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மெய்யழகனை யார், எதற்காக கொலை செய்தனர் எனத் தெரியவில்லை. இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் CHATGPT, DeepSeek ஏஐ பயன்படுத்த கூடாது: மத்திய நிதி அமைச்சகம் தடை

தொங்கு சட்டசபை ஏற்பட்டால் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு இல்லை: காங்கிரஸ் அறிவிப்பு..!

கடன் வாங்கியது ரூ.6000 கோடி.. வங்கிகள் வசூலித்தது ரூ.14000 கோடி.. விஜய் மல்லையா வழக்கு..!

18 ஊழியர்களை திடீரென நீக்கிய திருப்பதி தேவஸ்தானம்.. என்ன காரணம்?

டெல்லியில் நடைபெறும் திமுக ஆர்ப்பாட்டம்.. ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments