Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேரளாவில் தலித் பெண் பலாத்காரம் செய்து கொலை: மூன்று பேர் கைது

கேரளாவில் தலித் பெண் பலாத்காரம் செய்து கொலை: மூன்று பேர் கைது
, புதன், 4 மே 2016 (16:42 IST)
கேரளா மாநிலம், பெரும்பாவூரில் சட்டக்கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மாணவியின் உடல் பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் மாணவியின் உடலில் 30 இடங்களில் கூர்மையான அயுதங்களால் சிதைக்கப்பட்டது என காவல் துறையினர் தெரிவித்தனர்.
 

 

இந்நிலையில் ஏர்ணாகுள்த்தில் பொதுமக்கள், பெண்கள் அமைப்பினர் குற்றவாளியை கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இதனால் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.இதைத்தொடர்ந்து மாணவியின் கொலை வழக்கில் தொடர்புள்ள 3 பேரை காவல்துறை கைது செய்தது.

மேலும், பலாத்காரம் செய்தது ஒரு நபராக இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும், விசாரணைக்காக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் கேரள மாநில தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையம், கேரள மாநில மனித உரிமை ஆணையக் குழு போன்ற அமைப்புகள், இந்த வழக்கில் முக்கியத்துவம் காட்டிவருவதுடன்,  காவல்துறையினரிடம் இருந்து விசாரணை அறிக்கைகளை பெற முயன்று வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உயிருடன் உள்ளதாக கருதப்படும் ஊடகவியலாளருக்கு அஞ்சலி செலுத்திய இலங்கை பத்திரிகை