Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குவாட்டர் மதுபான உற்பத்தி நிறுத்தப்படும்.. மது தயாரிப்பு நிறுவனங்கள் அறிவிப்பால் பரபரப்பு..!

Siva
வெள்ளி, 6 ஜூன் 2025 (07:57 IST)
கேரளாவில் 300 மில்லி மீட்டருக்கு குறைவான கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் பாட்டில் உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, இந்த தடை அமலுக்கு வந்தால் குவாட்டர் மதுபான உற்பத்தி நிறுத்தப்படும் என மது தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
குவாட்டர் மதுபானம் மூலம் மட்டும் கேரளா அரசுக்கு ஆண்டுக்கு 650 கோடி ரூபாய் வருவாய் கிடைப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில், கேரள அரசு இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பிளாஸ்டிக் பாட்டில் உற்பத்தியை குறைக்கும் வகையில், கேரள அரசு 300 மில்லி மீட்டருக்கு குறைவான கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் உற்பத்திக்கு தடை விதித்துள்ளது. சுற்றுச்சூழல் மேம்பாட்டு காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தடையால் மதுபான உற்பத்தி நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
 
இந்த தடை அமலுக்கு வந்தால் குவாட்டர் மதுபான உற்பத்தி நிறுத்தப்படும் என்று மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ள நிலையில், இந்த விஷயத்தில் கேரளா அரசு தனது உத்தரவை திரும்ப பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
 
குவாட்டர் மது பாட்டில் உற்பத்தி நிறுத்தப்பட்டால், மது கடைகளில் குவாட்டர் மதுபானம் விற்பனையும் நிறுத்தப்படும். இதனால், ‘ஆப்’ அல்லது ‘ஃபுல்’ மட்டுமே வாங்க வேண்டிய நிலை மது குடிப்பவர்களுக்கு ஏற்படும் என்பதால், பெரும் குழப்பம் ஏற்படும் என்று கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments