Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டுக்கே செல்லும் அத்தியாவசியப் பொருட்கள் ! ஸொமாட்டோவுடன் கூட்டணி அமைத்த கேரள அரசு !

Webdunia
வெள்ளி, 27 மார்ச் 2020 (11:02 IST)
கேரள அரசு மக்களின் அத்தியாவசியப் பொருட்கள் வீட்டுக்கே செல்லும் வகையில் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸொமட்டோவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

கேரளாவில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 110 ஐ தாண்டியுள்ளது.இந்நிலையில் அம்மாநில முதல்வர் நிவாரணப் பணிகளுக்காக 20,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். மேலும் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளதால் அவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்துள்ளார்.

இந்நிலையில் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸொமாட்டோவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு ரேஷன் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை மக்களின் வீடுகளுக்கே கொண்டு செல்லும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

முதல்கட்டமாக எர்ணாகுளம் பகுதியில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஆன்லைன் மூலம் மக்கள் பொருளை முன்பதிவு செய்தால், அவை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த வாரங்களில் இத்திட்டம் கோழிக்கோடு மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments