Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆள் வைத்து தாக்க சதி நடக்கிறது: முதலமைச்சர் மீது கவர்னர் திடுக்கிடும் குற்றச்சாட்டு..!

Webdunia
செவ்வாய், 12 டிசம்பர் 2023 (11:26 IST)
தன்னை ஆள் வைத்து தாக்க சதி நடக்கிறது என்ன கேரள மாநில கவர்னர், முதலமைச்சர் மீது குற்றம் சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
தமிழகத்தை போலவே கேரளாவிலும் முதலமைச்சர் மற்றும் கவர்னர் ஆகிய இருவருக்கும் இடையே மோதல் போக்கு நடந்து வருகிறது. இந்த நிலையில் கவர்னர் ஆரிப் முகமது கான்  டெல்லி செல்வதற்காக திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு சென்றபோது மார்க்கிஸ்ட் கட்சியின் துணை அமைப்புகளில் ஒன்றின் நிர்வாகிகள் சிலர் அவருடைய காரை மறித்தனர். 
 
மேலும் அவருக்கு எதிராக கருப்பு கொடியை காட்டி கோஷங்களையும் எழுப்பினர். இதனை அடுத்து கவர்னர் ஆரிப் முகமது கான் போராட்டக்காரர்களை கிரிமினல் என திட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. 
 
இதை அடுத்து இந்த சம்பவம் குறித்து கவர்னர் கூறிய போது ’இது தற்செயலான சம்பவம் அல்ல, என்னை காயப்படுத்த சதி நடத்தப்படுகிறது, இவர்களை அனுப்பியதே முதலமைச்சர் தான்’ என்றும் கூறினார்.  இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக என்ன ப்ளான் பண்ணாலும், அதிமுககிட்ட நடக்காது! - அதிமுக அன்வர் ராஜா கருத்து!

ஒரு நாளைக்கு 10 மணிநேரம் வரை வேலை.. வணிக நிறுவன ஊழியர்களுக்கு புதிய விதி: அரசு உத்தரவு!

மேலும் 2 நாடுகளில் UPI அறிமுகம்.. பிரதமர் வெளிநாட்டு பயணத்தில் ஒரு புதிய மைல்கல்..!

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி விவகாரம்: குற்றம் நடந்தபின் சரக்கடித்துவிட்டு சாப்பிட்டு பதட்டமின்றி சென்ற மிஸ்ரா..!

மக்களை காக்க, தமிழகத்தை மீட்க.. உங்களை காண வருகிறேன்! - எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப் பயணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments