Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுனரின் ஃபேஸ்புக் பக்கம் ஹேக்: அதிர்ச்சி தகவல்

Webdunia
சனி, 15 அக்டோபர் 2022 (16:46 IST)
கேரளா ஆளுநரின் பேஸ்புக் பக்கம் திடீரென ஹேக் செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
கேரள ஆளுநர் ஃபேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை அடுத்து கேரள ஆளுநர் பேஸ்புக் பக்கத்தை ஹேக் செய்தது யார் என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்
 
இந்த பக்கத்தை மீண்டும் செயலுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக ஆளுநரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. கேரள ஆளுநர் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டது குறித்து பல மணி நேரமாகியும் ஆளுநர் இன்னும் பேஸ்புக் பக்கம் செல்லவில்லை 
 
ஆனாலும் அவரது பதிவுகள் அனைத்தும் இன்னும் நீக்கப்படாமல் உள்ளது என்றும் கூறப்படுகிறது. மேலும் ஹேக் செய்யப்பட்ட ஆளுனரின் பேஸ்புக் பக்கத்தில் மூன்று பதிவுகள் பதிவாகியுள்ளதாகவும் அவை அரபு மொழியில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும் ஆளுனரின் பேஸ்புக் பக்கம் இன்னும் சில மணி நேரங்களில் மீட்கப்படும் என்று கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments