Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சவர்மா சாப்பிட்ட மாணவி மரணம்.. பலர் மருத்துவமனையில்..! – கேரளாவில் அதிர்ச்சி!

Webdunia
திங்கள், 2 மே 2022 (09:41 IST)
கேரளாவில் ஒரு கடையில் சவர்மா சாப்பிட்ட பலர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு அருகேயுள்ள செருவத்தூரில் பேருந்து நிலையம் அருகே ஐடியல் ஸ்னாக்ஸ் என்ற உணவகம் செயல்பட்டு வந்துள்ளது. அங்குள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பலர் பள்ளி முடிந்து பேருந்துக்கு காத்திருக்கும்போது அந்த உணவகத்தில் சவர்மா உள்ளிட்டவற்றை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக அந்த கடையில் சவர்மா சாப்பிட்ட மாணவர்கள் 15 பேர் உட்பட மொத்தம் 30 பேர் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சவர்மா சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவி தேவநந்தா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அந்த உணவகத்தை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments