Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அர்ஜெண்டினா வெற்றியை கொண்டாடியவர்களுக்கு அரிவாள் வெட்டு! – கேரளாவில் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2022 (10:07 IST)
உலகக்கோப்பையில் அர்ஜெண்டினா வெற்றி பெற்றதை கொண்டாடியபோது வன்முறை சம்பவங்கள் நடந்தது கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கத்தாரில் நடந்த ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இறுதி போட்டியில் பிரான்ஸ் – அர்ஜெண்டினா அணிகள் மோதிக் கொண்ட நிலையில், பிரான்சை வென்று அர்ஜெண்டினா வரலாற்று வெற்றியை பெற்றது. அர்ஜெண்டினாவின் இந்த வெற்றியை உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

கால்பந்து ரசிகர்கள் அதிகமாக உள்ள கேரளாவிலும் பல பகுதிகளில் அர்ஜெண்டினாவின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடினர். பல இடங்களில் அர்ஜெண்டினா கொடி, மெஸ்சியின் புகைப்படத்தோடு ரசிகர்கள் ஊர்வலம் சென்றனர். அப்படியாக நடந்த கொண்டாட்டத்தில் ரசிகர்களிடையே கைகலப்பு, வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளது.

பள்ளியான்மூளை பகுதியில் அர்ஜெண்டினா வெற்றியை தொடர்ந்து ரசிகர்கள் நடத்திய ஊர்வலத்தில் ஏற்பட்ட கலவரத்தால் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. கொல்லத்தில் நடந்த ஊர்வலகத்தில் 17 வயது இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்து திடீரென இறந்துள்ளார். இதுபோல தலச்சேரி, கொச்சி, திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளிலும் மோதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்..! என்ன காரணம் தெரியுமா..?

இன்று தங்கம், வெள்ளி விலை ஏற்றமா? இறக்கமா? சென்னை நிலவரம்..!

குற்றாலம் மெயின் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்.. கட்டுப்பாடுகளுடன் குளிக்க அனுமதி..!

பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து..! 4 தொழிலாளர்கள் பலி..!!

ரத்து செய்யப்பட்ட யூ.ஜி.சி. நெட், சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வுக்கான புதிய தேதிகள் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments